Pages

Contact Us

Monday, October 10, 2022

நூல்: இப்னு குஸைமா 1226, அபூதாவூத் 5242

 சுன்னத்தான தொழுகைகளில் ழுஹா தொழுகையும் ஒன்றாகும் ழுஹா என்பது சூரியன் உதித்து உச்சிக்கு வந்து சாயும் நேரத்தைக் குறிக்கும். இந்த நேரத்திற்குள் தொழப்படும் தொழுகை என்பதால் இந்தத் தொழுகை ழுஹாத் தொழுகை என அழைக்கப்படுகின்றது.


சூரியன் உதித்து சுமார் இருபது நிமிடங்கள் வரையுள்ள நேரமும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாகும். இந்த இரு நேரங்களுக்கும் மத்தியில் ழுஹா தொழுவது சுன்னாவாகும்.


ழுஹா தொழுகையின் சிறப்பு:


மனித உடலில் உள்ள எல்லா மூட்டுக்களுக்கும் மனிதன் தர்மம் செய்தாக வேண்டும். தான் சந்திப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும் தர்மமாகும். நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் ஸதகாவாகும். பாதையில் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதும் தர்மமாகும்.


மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதும் தர்மமாகும். ழுஹாவுடைய நேரத்தில் தொழப்படும் இரண்டு ரக்அத்துக்கள் இவை அத்தனையையும் ஈடு செய்யும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’

அறிவிப்பவர்: அபூதர் (வ)

நூல்: முஸ்லிம் 720-84, அபூதாவூத்: 1285


முஸ்லிமுடைய அறிவிப்பில், ‘சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் எனக் கூறுவதும் தர்மமாகும்’ என்று இடம்பெற்றுள்ளது. ழுஹா தொழுகை மனித உடம்புக்காகச் செய்யப்பட வேண்டிய ஸதகாவை ஈடு செய்கின்றது என இந்த நபிமொழி கூறுகின்றது.


‘மனிதனின் உடலில் 360 மூட்டுக்கள் உள்ளன. ஒவ்வொரு மூட்டுக்காவும் அவர் தர்மம் செய்தாக வேண்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யாரால் இதைச் செய்ய முடியும் எனக் கேட்கப்பட்ட போது, ‘பள்ளியில் துப்பப்பட்ட எச்சிலை புதைத்துவிடுவது, பாதையில் தொல்லை தருவதை அகற்றிவிடுவது,.. போன்ற செயல்களால் அந்த தர்மத்தை செய்ய முடியும். அதற்கு சக்தி பெறாவிட்டால் ழுஹாவுடைய இரண்டு ரக்அத்துக்கள் உனக்கு அதை ஈடு செய்யும் என நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)

நூல்: இப்னு குஸைமா 1226, அபூதாவூத் 5242

(இது ஹஸனான அறிவிப்பு என ஷுஐப் அல் அர்னாஊத் கூறுகின்றார்.)


இந்த நபிமொழிகள் மூலம் ஸலாதுல் ழுஹா எனப்படும் ழுஹா தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட ஒன்று என்பதையும் அதன் சிறப்பையும் அறியலாம்.

No comments:

Post a Comment