Pages

Contact Us

Wednesday, December 28, 2022

லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 26 )

 லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 26 )


لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ

லாயிலாஹ இல்லல்லாஹ்.

பொருள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

சட்டம் : இறைமறுப்பாளர்களாக இருந்தாலும் லாயிலாஹ இல்லல்லாஹ், என்று சொன்ன பிறகு கொல்வது குற்றம்.

ஆதாரம் : உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஜுஹைனா' குலத்தைச் சேர்ந்த 'ஹுரக்கா' எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச் சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டோம். அப்போது அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்றார். எனவே, அவரைவிட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கி கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவரின் மீது பாய்ச்சி அவரைக் கொன்றுவிட்டேன். நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'உசாமா! 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?' என்று கேட்டார்கள். நான் 'அவர் உயிரைப் காத்துக்கொள்ளவே (அவ்வாறு கூறினார்)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?' என்று திரும்பத் திரும்ப (அதிருப்தியுடன்) என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் (இந்நிகழ்ச்சி) நடந்த பின்னால் இஸ்லாத்தைத் தழுவி) இருந்தால் நன்றாயிருக்குமே! என்று ஆசைப்பட்டேன்.
ஸஹீஹ் புகாரி : 6872.

No comments:

Post a Comment