Pages

Contact Us

Tuesday, February 21, 2023

அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 1 )

 அல்லாஹு அக்பர் என்பதன் சிறப்பு. ( 1 )


اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்பர்.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்.

சட்டம் : தொழுகையை துவக்கும் போது தக்பீர் கூற வேண்டும்.

ஆதாரம் : அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.'நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) 'அல்லாஹு அக்பர்' என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதும்! பிறகு (குனிந்து) 'ருகூஉ' செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்றுநேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உம்முடைய தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6667.

No comments:

Post a Comment