ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 2 )
ஷைத்தானுக்கு இறைவனால் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
قَالَ أَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
"அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 7:14
قَالَ إِنَّكَ مِنَ الْمُنظَرِينَ
"நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 7:15
قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
"இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக!'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 15:36
قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنظَرِينَ إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ
"குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 15:37,38
قَالَ أَرَأَيْتَكَ هَٰذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا
"என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்'' எனவும் கூறினான்.
திருக்குர்ஆன் 17:62
Pages
▼
Contact Us
▼
No comments:
Post a Comment