Pages

Contact Us

Wednesday, March 6, 2024

நற்பண்புகள். ( 23 )

நற்பண்புகள். ( 23 )
கனவு சஞ்சலம் வேண்டாம்.

ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்;
அறிந்தவன்.
திருக்குர்ஆன் 41:36

அபூ ஸலமா(ரஹ்) கூறினார்.
'(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக் (கனவில்) கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) சொல்ல செவியுற்றேன்.
ஸஹீஹ் புகாரி : 5747.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment