Pages

Contact Us

Saturday, March 16, 2024

நற்பண்புகள். ( 29 )

நற்பண்புகள். ( 29 )
முறைப்படி நிறைவேற்றுவீர்!

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!
திருக்குர்ஆன் 6:118

ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார். ஒரு (ஹஜ்ஜுப் பெரு) நாளின்போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணிகளை அறுத்துக் குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களின் தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்துவிட்டனர். (தொழுகையிலிருந்து) திரும்பிய நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் 'குர்பானி' கொடுத்துவிட்டிருப்பதைக் கண்டபோது, 'தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். தொழும் வரை அறுத்திருக்காதவர் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5500.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment