Pages

Contact Us

Monday, April 15, 2024

நற்பண்புகள். ( 55 )

நற்பண்புகள். ( 55 )
மரணத்தை விரும்பாதீர்!

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
திருக்குர்ஆன் 29:57

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!' என்று கேட்கட்டும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5671.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment