சொர்க்கச் சோலைகள். ( 12 )
இரண்டு வகை சொர்க்கம்.وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.
திருக்குர்ஆன் 55:46
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
திருக்குர்ஆன் 55:50
فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ
ஒவ்வொரு கனியிலும் இரண்டு வகைகள் அவ்விரண்டிலும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:52
مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ
அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.
திருக்குர்ஆன் 55:54
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
அவ்விரண்டும் அல்லாத வேறு இரு சோலைகளும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:62
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 55:66
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
திருக்குர்ஆன் 55:68
No comments:
Post a Comment