Pages

Contact Us

Saturday, October 7, 2023

நூல் : புகாரி 6482

. 💕💕💕💕💕💕💕💕

🔜 நபிமொழி 🔚


அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கும், அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு என்னை அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டு,

ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று,

“நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம்.)

நான், நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன் ஆவேன்.

ஆகவே, தப்பித்துக் கொள்ளுங்கள்; தப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பி விட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர்.

பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.


அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல் : புகாரி 6482

No comments:

Post a Comment