Tuesday, January 16, 2024

உபதேசம் 932

﷽ உபதேசம் 932
15-01-2024 திங்கட்கிழமை

நபி (ஸல்) அவர்களிடம் வந்த ஒரு மனிதா் "மறுமை நாள் எப்பொழுது வரும்?" என்று கேட்க "அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய்?" என்று நபி ஸல் அவா்கள் அந்த மனிதாிடம் கேட்டார்கள். அதற்கு அவா் "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீ நேசித்தவர்களுடன் தான் மறுமையில் இருப்பாய்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை!

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி-3288

No comments:

Post a Comment