Thursday, September 7, 2023

நூல்:முஸ்னத் ஷாஃபிஇய்:148/1

بسم الله الرحمن الرحيم

ஹஜ்ரத் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது பிரசங்கத்தில், “கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்’’, உலகம் தற்காலிகமான வியாபாரப் பொருளாகும். (அதற்கு எவ்வித விலையும், மதிப்பும் கிடையாது) ஏனேனில், அதில் நல்லோர், தீயோர் அனைவருக்கும் பங்குண்டு, அனைவரும் அதிலிருந்து உண்கின்றனர். நிச்சயமாக மறுமையானது, குறித்த நேரத்தில் வர இருக்கின்ற அந்தரங்கமான உண்மையாகும். அதில் சக்தி மிக்க அரசன் தீர்ப்பு வழங்குவான், கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்! எல்லா நலவுகளும், அதன் அனைத்து வகைகளும் சொர்க்கத்தில் உள்ளன. சகலவித கெடுதிகளும், அதன் எல்லா வகைகளும் நரகத்தில் உள்ளன. நன்றாக அறிந்து கொள்ளுங்கள்! எதைச் செய்தாலும், அல்லாஹ்வை பயந்தவர்களாகச் செய்யுங்கள், நீங்கள் தத்தமது செயல்களுடன் அல்லாஹ் வின் சமூகத்தில் கொண்டுவரப்படுவீர்கள். அணுவளவு நன்மையைச் செய்தவரும் அதைக் கண்டு கொள்வார், அணுவளவு தீமை செய்தவரும் அதைக் கண்டு கொள்வார்’’ என்று கூறினார்கள்.

(நூல்:முஸ்னத் ஷாஃபிஇய்:148/1)

No comments:

Post a Comment