بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் ('அல்கவ்ஸர்') தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள்.
உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் *'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தில் புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.
இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.
அறிவிப்பாளர் - ஷுஐப் இப்னு அபீ ஹம்ஸா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்' என்றும்,
அறிவிப்பாளர் - உகைல் இப்னு காலித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'விரட்டப்படுவார்கள்' என்றும் இடம் பெற்றுள்ளது.
ஸஹீஹ் புஹாரி : 6️⃣5️⃣8️⃣6️⃣.
அத்தியாயம் : 8️⃣1️⃣.
No comments:
Post a Comment