அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 54 )
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்.
பொருள் : இறைவா (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
சட்டம் : நபி (ஸல்) அவர்கள் வழியில் தங்கும்போது செய்த பிரார்த்தனை.
ஆதாரம் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்' என்று அதிகமாகப் பிரார்த்திப்பதை நான் செவிமடுத்துவந்தேன்.
ஸஹீஹ் புகாரி : 6363.
No comments:
Post a Comment