Monday, June 12, 2023

இறைவனை நினைவு கூரல். ( 7 )

 இறைவனை நினைவு கூரல். ( 7 )

நின்றும், அமர்ந்தும், படுத்துக் கொண்டும் இறைவனை நினைவு கூரலாம்.

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள்.
திருக்குர்ஆன் 3:191

فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ

நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்!
திருக்குர்ஆன் 4:103

وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான்.
திருக்குர்ஆன் 10:12

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا

அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.
திருக்குர்ஆன் 25:64

قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا

இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக!
திருக்குர்ஆன் 73:2

No comments:

Post a Comment