Monday, June 19, 2023

அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 56 )

அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 56 )

اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ جَبَلَيْهَا مِثْلَ مَا حَرَّمَ بِهِ إِبْرَاهِيمُ مَكَّةَ، اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ

அல்லாஹும்ம இன்னி அஹர்ரம மா பைன ஜபலைஹா மிஸ்ல மா ஹர்ரம பிஹி இப்ராஹீம் மக்கத்து, அல்லா ஹும்ம பாரிக் லஹும் ஃபி முத்தஹிம் வஸாஇஹிம்.

பொருள் : இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனித(நகர)மாக அறிவித்ததைப் போன்று இந்த இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித(நகர)மாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) 'முத்(து)' மற்றும் 'ஸாஉ' ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக.

சட்டம் : இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனிதநகரமாக அறிவித்ததைப் போன்று, மதினாவை நபி (ஸல்) புனிதநகரமாக அறிவித்தார்கள்.

ஆதாரம் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்: பின்னர் நபி(ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்து கொண்டிருந்தபோது 'உஹுத்' மலை அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த சிறிய மலை நம்மை நேசிக்கின்றது. நாமும் அதனை நேசிக்கிறோம்' என்றார்கள். பிறகு மதீனாவைப் பார்த்தபோது, 'இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனித(நகர)மாக அறிவித்ததைப் போன்று இந்த இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித(நகர)மாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) 'முத்(து)' மற்றும் 'ஸாஉ' ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6363.

No comments:

Post a Comment