﷽ உபதேசம் : 856
31-10-2023 செவ்வாய்க்கிழமை
"மக்களில் சிறந்தவர் யார்?' என்று நபி (ஸல்) அவா்களிடம் கேட்கப்பட்டதற்கு, "உண்மை பேசுபவரும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவார்!" என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், "உண்மை பேசுபவரை அறிவோம்! ஆனால் தூய உள்ளம் கொண்டவர் யார்?" என்று கேட்க்க நபி (ஸல்) அவர்கள் "அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது!" என்று கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) இப்னுமாஜா - 4206
Tuesday, October 31, 2023
உபதேசம் : 856
குர்ஆன் வசனம் 606
﷽ குர்ஆன் வசனம் 606
31-10-2023 செவ்வாய்க்கிழமை
اِنَّ اَكۡرَمَكُمۡ عِنۡدَ اللّٰهِ اَ تۡقٰٮكُمۡ
உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்.
[அல்குர்ஆன் 49:13]
Monday, October 30, 2023
உபதேசம் : 855
﷽ உபதேசம் : 855
30-10-2023 திங்கட்கிழமை
"இல்லறத்தில் ஈடுபடாமலும் பாவமான செயல்களைச் செய்யாமலும் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பேன் அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1521
குர்ஆன் வசனம் 605
﷽ குர்ஆன் வசனம் 605
30-10-2023 திங்கட்கிழமை
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقۡنٰكُمۡ مِّنۡ ذَكَرٍ وَّاُنۡثٰى وَجَعَلۡنٰكُمۡ شُعُوۡبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوۡا
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.
[அல்குர்ஆன் 49:13]
Sunday, October 29, 2023
குர்ஆன் வசனம் 604
﷽ குர்ஆன் வசனம் 604
29-10-2023 ஞாயிற்றுக்கிழமை
துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
[அல்குர்ஆன் 49:12]
உபதேசம் : 854
﷽ உபதேசம் : 854
29-10-2023 ஞாயிற்றுக்கிழமை
"சாலையில் ஒரு மனிதா் நடந்து சென்றுகொண்டிருந்தபொழுது பாதையில் இருந்த முட்கிளை ஒன்றைக் கண்டு அதை எடுத்து எறிந்தார். இந்த நற்செயலை அல்லாஹ் ஏற்று அவருடைய பாவங்களை மன்னித்தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2472
Saturday, October 28, 2023
குர்ஆன் வசனம் 603
﷽ குர்ஆன் வசனம் 603
28-10-2023 சனிக்கிழமை
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا كَثِيۡرًا مِّنَ الظَّنِّ
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும்.
[அல்குர்ஆன் 49:12]
உபதேசம் : 853
﷽ உபதேசம் : 853
28-10-2023 சனிக்கிழமை
பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். ஏனென்றால் மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம் - 552
நூல்: புகாரி-2446
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
பாலஸ்தீனம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜும்மா தினத்தில் அதிகம் அதிகமாக இறைவனிடம் துவா செய்வோம்
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர்.
அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
(இப்படிக் கூறும்போது)
நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி-2446
நூல் : புகாரி 876
🕋🕋🕋🕋🕋🕋
🔜நபிமொழி - ஜும்ஆ🔚
'இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம்.
ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன.
நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம்.
இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும்.
ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும்
அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 876
உபதேசம் : 852
﷽ உபதேசம் : 852
27-10-2023 வெள்ளிக்கிழமை
'ஒருவர் வீட்டிற்குள் நுழையும்பொழுது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் ஷைத்தான் தன் கூட்டத்தாரிடம “இன்று இரவு உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உண்ணும்பொழுது அல்லாஹ்வின் பெயரைக் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்று இரவு நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் பெற்றுக்கொண்டீர்கள்” என்று சொல்கிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 4106
குர்ஆன் வசனம் 602
﷽ குர்ஆன் வசனம் 602
27-10-2023 வெள்ளிக்கிழமை
وَلَا تَلۡمِزُوۡۤا اَنۡفُسَكُمۡ وَلَا تَنَابَزُوۡا بِالۡاَلۡقَابِؕ بِئۡسَ الِاسۡمُ الۡفُسُوۡقُ بَعۡدَ الۡاِيۡمَانِ ۚ وَمَنۡ لَّمۡ يَتُبۡ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوۡنَ
உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
[அல்குர்ஆன் 49:11]
வெள்ளிக்கிழமை நினைவூட்டல்
வெள்ளிக்கிழமை நினைவூட்டல்
இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்திடுவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
*அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), *
நூல் : புகாரி 4797
பலன்கள்
யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸாயீ
உபதேசம் : 851
﷽ உபதேசம் : 851
26-10-2023 வியாழக்கிழமை
"ஓர் ஆட்டுக் காலின் கீழ்ப்பகுதியை சமைத்து விருந்து)க்கு அழைக்கப்பட்டாலும் நிச்சயம் நான் அந்த அழைப்பை) ஏற்றுக்கொள்வேன். ஆட்டுக்காலின் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக்கொள்வேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5178
குர்ஆன் வசனம் 601
﷽ குர்ஆன் வசனம் 601
26-10-2023 வியாழக்கிழமை
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும்.
[அல்குர்ஆன் 49:11]
Wednesday, October 25, 2023
உபதேசம் : 850
﷽ உபதேசம் : 850
25-10-2023 புதன்கிழமை
"உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்பொழுது “நான் இப்படிச் செய்திருந்தால் அப்படி ஆகியிருக்குமே! அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்குமே!” என்று அங்கலாய்த்துக் கூறாதே. அவ்வாறு கூறுவது ஷைத்தானின் வழியாகும் மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்தது. அவன் நாடியதைச் செய்தான்” என்று சொல்." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5178
குர்ஆன் வசனம் 600
﷽ குர்ஆன் வசனம் 600
25-10-2023 புதன்கிழமை
اِخۡوَةٌ فَاَصۡلِحُوۡا بَيۡنَ اَخَوَيۡكُمۡ ۚ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُوۡن
உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
[அல்குர்ஆன் 49:10]
Tuesday, October 24, 2023
குர்ஆன் வசனம் 599
﷽ குர்ஆன் வசனம் 599
24-10-2023 செவ்வாய்க்கிழமை
اِنَّ اللّٰهَ يُحِبُّ الۡمُقۡسِطِيۡنَ
நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
[அல்குர்ஆன் 49:9]
உபதேசம் : 849
﷽ உபதேசம் : 849
24-10-2023 செவ்வாய்க்கிழமை
'ஆதமுடைய மகன் ஸஜ்தா வசனத்தை ஓதி சஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமுடைய மகன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் ஆதமுக்கு ஸஜ்தா செய்யும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்” என்று கூறியபடி விலகிச்செல்கிறான்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 133
Monday, October 23, 2023
உபதேசம் : 848
﷽ உபதேசம் : 848
23-10-2023 திங்கட்கிழமை
"எவரிடமிருந்து நல்லதை மக்கள் எதிர்பார்ப்பாா்களோ இன்னும் தீமை குறித்து அஞ்சமாட்டா்களோ அவரே உங்களில் சிறந்தவர். மேலும் எவரிடமிருந்து நன்மையை எதிர்பார்க்காமல் தீமைக்கள் குறித்து பயப்படுவா்களோ அவரே உங்களில் கெட்டவர்" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ- 2189
குர்ஆன் வசனம் 598
﷽ குர்ஆன் வசனம் 598
23-10-2023 திங்கட்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِنۡ جَآءَكُمۡ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوۡۤا اَنۡ تُصِيۡبُوۡا قَوۡمًا ۢ بِجَهَالَةٍ فَتُصۡبِحُوۡا عَلٰى مَا فَعَلۡتُمۡ نٰدِمِيۡنَ
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
[அல்குர்ஆன் 49:6]
Sunday, October 22, 2023
உபதேசம் : 847
﷽ உபதேசம் : 847
22-10-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஒவ்வோர் அடியாரும் எந்த மனோநிலையில் மரணிக்கின்றாரோ அதே நிலையிலேயே எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம்-5518
குர்ஆன் வசனம் 597
﷽ குர்ஆன் வசனம் 597
22-10-2023 ஞாயிற்றுக்கிழமை
"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?" என்று கேட்பீராக!
[அல்குர்ஆன் 48:11]
Saturday, October 21, 2023
உபதேசம் : 846
﷽ உபதேசம் : 846
21-10-2023 சனிக்கிழமை
"உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நாம் நியமித்திருக்க அவர் ஓர் ஊசியையோ அல்லது அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் அமீரா (ரலி) முஸ்லிம்-3743
குர்ஆன் வசனம் 596
﷽ குர்ஆன் வசனம் 596
21-10-2023 சனிக்கிழமை
وَمَنۡ اَوۡفٰى بِمَا عٰهَدَ عَلَيۡهُ اللّٰهَ فَسَيُؤۡتِيۡهِ اَجۡرًا عَظِيۡمًا
யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
[அல்குர்ஆன் 48:10]
உபதேசம் : 845
﷽ உபதேசம் : 845
20-10-2023 வெள்ளிக்கிழமை
"தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றிற்குரிய ஸகாத்தை நிறைவேற்றாதவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ச்சப்பட்டதாக மாறிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1803
குர்ஆன் வசனம் 595
﷽ குர்ஆன் வசனம் 595
20-10-2023 வெள்ளிக்கிழமை
وَاِنۡ تَتَوَلَّوۡا يَسۡتَـبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ۙ ثُمَّ لَا يَكُوۡنُوۡۤا اَمۡثَالَـكُم
நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு ஒரு சமுதாயத்தை உங்களுக்குப் பகரமாக அவன் ஆக்குவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 47:38]
நூல் : புகாரி 4797
வெள்ளிக்கிழமை நினைவூட்டல்
இன்று வெள்ளிக்கிழமை எனவே நபிகளார் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள் வளத்தைப் பொழிந்திடுவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
*அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), *
நூல் : புகாரி 4797
பலன்கள்
யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸாயீ
Thursday, October 19, 2023
உபதேசம் : 844
﷽ உபதேசம் : 844
19-10-2023 வியாழக்கிழமை
"ஜும்ஆ நாள் வந்துவிட்டால் பள்ளியின் ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நின்றுகொண்டு முதலில் வருபவரை – அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1416
குர்ஆன் வசனம் 594
﷽ குர்ஆன் வசனம் 594
19-10-2023 வியாழக்கிழமை
யாரேனும் கஞ்சத்தனம் செய்தால் அவர் தமக்கே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவைகளற்றவன். நீங்களே தேவைகளுடையோர்.
[அல்குர்ஆன் 47:38]
நூல் : முஸ்லிம்-5376
மிக மோசமான இரண்டு செயல்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி)
, நூல் : முஸ்லிம்-5376
நூல் : புகாரி-1442
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், “அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-1442
Wednesday, October 18, 2023
குர்ஆன் வசனம் 593
﷽ குர்ஆன் வசனம் 593
18-10-2023 புதன்கிழமை
اِنَّ الَّذِيۡنَ كَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِيۡلِ اللّٰهِ ثُمَّ مَاتُوۡا وَهُمۡ كُفَّارٌ فَلَنۡ يَّغۡفِرَ اللّٰهُ لَهُمۡ
மறுப்போராகவே மரணித்து விட்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
[அல்குர்ஆன் 47:34]
உபதேசம் : 843
﷽ உபதேசம் : 843
18-10-2023 புதன்கிழமை
"குளித்து, ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருப்பவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் (ரலி) நஸயீ - 1381
Tuesday, October 17, 2023
உபதேசம் : 842
﷽ உபதேசம் : 842
17-10-2023 செவ்வாய்க்கிழமை
மக்களுக்குத் தொழுகை நடத்த ஒரு மனிதரை ஏற்பாடு செய்துவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச்சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிடவேண்டும் என எண்ணியதுண்டு!" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) முஸ்லிம் - 1156
குர்ஆன் வசனம் 592
﷽ குர்ஆன் வசனம் 592
17-10-2023 செவ்வாய்க்கிழமை
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اَطِيۡعُوا اللّٰهَ وَاَطِيۡعُوا الرَّسُوۡلَ وَلَا تُبۡطِلُوۡۤا اَعۡمَالَـكُمۡ
நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் ! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் ! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள் !
[அல்குர்ஆன் 47:33]
குர்ஆன் வசனம் 591
﷽ குர்ஆன் வசனம் 591
16-10-2023 திங்கட்கிழமை
وَلَـنَبۡلُوَنَّكُمۡ حَتّٰى نَعۡلَمَ الۡمُجٰهِدِيۡنَ مِنۡكُمۡ وَالصّٰبِرِيۡنَ ۙ وَنَبۡلُوَا۟ اَخۡبَارَكُمۡ
உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.
[அல்குர்ஆன் 47:31]
உபதேசம் : 841
﷽ உபதேசம் : 841
16-10-2023 திங்கட்கிழமை
"ஒரு பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) புகாரி - 2554
குர்ஆன் வசனம் 590
﷽ குர்ஆன் வசனம் 590
15-10-2023 ஞாயிற்றுக்கிழமை
اَفَلَا يَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰى قُلُوۡبٍ اَ قۡفَالُهَا
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
[அல்குர்ஆன் 47:24]
உபதேசம் : 840
﷽ உபதேசம் : 840
15-10-2023 ஞாயிற்றுக்கிழமை
'என்னுடைய தந்தை எனது விருப்பமின்றி எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டாா்!' என்று ஒரு கண்ணிப்பெண் கூறியதற்கு நபி (ஸல்) அவர்கள், "அத்திருமணத்தை முறித்து விடலாம் அல்லது தொடரலாம்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் - 2091
Saturday, October 14, 2023
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 4 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 4 )
மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன.
قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا
"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:88
وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்களிலும், மனிதர்களிலும் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகிவிட்டது. இவர்கள் நட்டமடைந்தோராகி விட்டனர்.
திருக்குர்ஆன் 41:25
أُولَٰئِكَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ
அவர்களுக்கு முன் சென்ற ஜின்களுடனும், மனிதர்களுடனும் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நட்டமடைந்தனர்.
திருக்குர்ஆன் 46:18
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
திருக்குர்ஆன் 51:56
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 55:33
உபதேசம் : 839
﷽ உபதேசம் : 839
14-10-2023 சனிக்கிழமை
"வலி (பொறுப்பாளர்) மூலமாகத் தவிர எந்த திருமணமும் இல்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) இப்னுமாஜா - 1875
குர்ஆன் வசனம் 589
﷽ குர்ஆன் வசனம் 589
14-10-2023 சனிக்கிழமை
اَفَمَنۡ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنۡ رَّبِّهٖ كَمَنۡ زُيِّنَ لَهٗ سُوۡٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوۡۤا اَهۡوَآءَهُمۡ
தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) தெளிவான மார்க்கத்தில் இருப்பவர், தனது மனோ இச்சைகளைப் பின்பற்றி தனது தீய செயல் அழகானதாகக் காட்டப்பட்டவனைப் போன்றவரா?
[அல்குர்ஆன் 47:14]
ஆதம் (அலை). ( 11 )
ஆதம் (அலை). ( 11 )
வானவர்கள் ஆட்சேபணை.
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 2:30
ஆதம் (அலை) வானவர்களை வென்றார்.
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!' என்று கேட்டான்.
திருக்குர்ஆன் 2:31
قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ
"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர்கள் கூறினர்.
திருக்குர்ஆன் 2:32
قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ
"ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது, "வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்த தையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.
திருக்குர்ஆன் 2:33
ஆகு எனும் கட்டளையால் ஆதம் (அலை) உருவானார்.
إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ ۖ خَلَقَهُ مِن تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُن فَيَكُونُ
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
திருக்குர்ஆன் 3:59
குர்ஆன் வசனம் 588
﷽ குர்ஆன் வசனம் 588
13-10-2023 வெள்ளிக்கிழமை
وَالَّذِيۡنَ كَفَرُوۡا فَتَعۡسًا لَّهُمۡ وَاَضَلَّ اَعۡمَالَهُمۡ
(ஏக இறைவனை) மறுப்போருக்குக் கேடு தான். அவர்களது செயல்களை அவன் அழித்து வீணானதாக்கி விட்டான்.
[அல்குர்ஆன் 47:8]
உபதேசம் : 838
﷽ உபதேசம் : 838
13-10-2023 வெள்ளிக்கிழமை
"நாம் ஒருவரை ஒரு பணிக்காக நியமித்து, அவருக்கு அதற்கான கூலியையும் அழகிய முறையில் வழங்கிய பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி) அபூதாவூத் - 2554
குர்ஆன் வசனம் 587
﷽ குர்ஆன் வசனம் 587
12-10-2023 வியாழக்கிழமை
يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَـنۡصُرُوا اللّٰهَ يَنۡصُرۡكُمۡ وَيُثَبِّتۡ اَقۡدَامَكُمۡ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.
[அல்குர்ஆன் 47:7]
உபதேசம் : 837
﷽ உபதேசம் : 837
12-10-2023 வியாழக்கிழமை
"எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டுவிடுங்கள்! உங்களுக்கு முன்சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான் அழிந்துபோயினர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 7288
Wednesday, October 11, 2023
குர்ஆன் வசனம் 586
﷽ குர்ஆன் வசனம் 586
11-10-2023 புதன்கிழமை
وَالَّذِيۡنَ قُتِلُوۡا فِىۡ سَبِيۡلِ اللّٰهِ فَلَنۡ يُّضِلَّ اَعۡمَالَهُمۡ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரின் செயல்களை அவன் வீணாக்கவே மாட்டான்.
[அல்குர்ஆன் 47:4]
உபதேசம் : 836
﷽ உபதேசம் : 836
11-10-2023 புதன்கிழமை
" அல்லாஹ்வின் மாா்க்கத்தை மேலோங்கச் செய்யவேண்டும் என்பதற்காக போரிடுகின்றவரே மகத்துவமும் கண்ணியமும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி) புகாரி - 123
Tuesday, October 10, 2023
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 3 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 3 )
ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை.
قَالَ عِفْرِيتٌ مِّنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ
"உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.
திருக்குர்ஆன் 27:39
قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ
கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.
திருக்குர்ஆன் 27:40
يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ
அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன.
திருக்குர்ஆன் 34:13
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.
திருக்குர்ஆன் 72:8
وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا
(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
திருக்குர்ஆன் 72:9
குர்ஆன் வசனம் 585
﷽ குர்ஆன் வசனம் 585
10-10-2023 செவ்வாய்க்கிழமை
உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான்.
[அல்குர்ஆன் 47:4]
உபதேசம் : 835
தினமும் ஓர் உபதேசம் : 835
10-10-2023 செவ்வாய்க்கிழமை
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒா் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி) திர்மிதீ - 1425
ஆதம் (அலை). ( 10 )
ஆதம் (அலை). ( 10 )
ஆதம் (அலை) பாவம் செய்தார்.
وَلَقَدْ عَهِدْنَا إِلَىٰ آدَمَ مِن قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا
இதற்கு முன் ஆதமிடம் உறுதிமொழி எடுத்தோம். அவர் மறந்து விட்டார். அவரிடம் உறுதியை நாம் காணவில்லை.
திருக்குர்ஆன் 20:115
فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۚ وَعَصَىٰ آدَمُ رَبَّهُ فَغَوَىٰ
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.
திருக்குர்ஆன் 20:121
ஆதம் (அலை) மன்னிக்கப்பட்டார்.
إِنَّ اللَّهَ اصْطَفَىٰ آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.
திருக்குர்ஆன் 3:33
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.
திருக்குர்ஆன் 7:23
ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَىٰ
பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர்வழி காட்டினான்.
திருக்குர்ஆன் 20:122
Monday, October 9, 2023
குர்ஆன் வசனம் 584
﷽ குர்ஆன் வசனம் 584
09-10-2023 திங்கட்கிழமை
وَالَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوۡا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّهِمۡۙ كَفَّرَ عَنۡهُمۡ سَيِّاٰتِهِمۡ وَاَصۡلَحَ بَالَهُمۡ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து, முஹம்மதுக்கு அருளப்பட்டது தமது இறைவனிடமிருந்து (வந்த) உண்மை என நம்புவோருக்கு அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் அவன் நீக்குகிறான். அவர்களின் நிலையைச் சீராக்குகிறான்.
[அல்குர்ஆன் 47:2]
உபதேசம் : 834
﷽ உபதேசம் : 834
09-10-2023 திங்கட்கிழமை
"என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்!' என்று ஒரு மனிதா் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு, "அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் அவனை நீ வணங்க வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்!" என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி) புகாரி - 1396
குர்ஆன் வசனம் 583
﷽ குர்ஆன் வசனம் 583
08-10-2023 ஞாயிற்றுக்கிழமை
اَلَّذِيۡنَ كَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِيۡلِ اللّٰهِ اَضَلَّ اَعۡمَالَهُمۡ
(ஏக இறைவனை) மறுத்து அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்போரின் செயல்களை (இறைவன்) வீணானதாக்கி விட்டான்.
[அல்குர்ஆன் 47:1]
உபதேசம் : 833
﷽ உபதேசம் : 833
08-10-2023 ஞாயிற்றுக்கிழமை
வீணாகக் கற்களை சுண்டி விளையாடுவதை நபி (ஸல்) அவா்கள் தடைசெய்தார்கள். ஏனென்றால், "அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. மாறாக கண்ணை பதம்பார்க்கவும் பல்லை உடைக்கவும்தான் உதவம்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் (ரலி) புகாரி - 6220
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 2 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 2 )
ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர்.
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا
ஜின், மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்க விருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்).
திருக்குர்ஆன் 6:130
முஹம்மது நபி (ஸல்) ஜின்களுக்கும் தூதராக அனுப்பப்பட்டார்.
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا ۖ فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ
(முஹம்மதே!) இக்குர்ஆனைச் செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக! அவை அவரிடம் வந்தபோது "வாயை மூடுங்கள்!'' என்று (தம் கூட்டத்தாரிடம்) கூறின. (ஓதி) முடிக்கப்பட்டபோது எச்சரிப்போராக தமது சமுதாயத்திடம் திரும்பின.
திருக்குர்ஆன் 46:29
قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا
ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 72:1
இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர்
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ
இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 6:112
இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான்.
திருக்குர்ஆன் 18:50
Saturday, October 7, 2023
நூல் : முஸ்லிம் 4126
. 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🔜 நபிமொழி 🔚
நபி (ஸல்) அவர்கள் பருகும்பொழுது மூன்று முறை மூச்சு விட்டு பருகி வந்தார்கள்!
மேலும் "இதுவே நன்கு தாகத்தை தனிக்கக்கூடியதும்,
உடல்நலப் பாதுகாப்பிற்கு ஏற்றதும்,
நன்கு செரிக்கச் செய்யக் கூடியதும் ஆகும்!"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் 4126
நூல் : புகாரி 6482
. 💕💕💕💕💕💕💕💕
🔜 நபிமொழி 🔚
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கும், அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு என்னை அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டு,
ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று,
“நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம்.)
நான், நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன் ஆவேன்.
ஆகவே, தப்பித்துக் கொள்ளுங்கள்; தப்பித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பி விட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர்.
பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல் : புகாரி 6482
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 1 )
ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல். ( 1 )
ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர்.
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:12
وَالْجَانَّ خَلَقْنَاهُ مِن قَبْلُ مِن نَّارِ السَّمُومِ
கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:27
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا
"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். "களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?'' என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன் 17:61
قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ ۖ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
"நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன் 38:76
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 55:15
குர்ஆன் வசனம் 582
﷽ குர்ஆன் வசனம் 582
07-10-2023 சனிக்கிழமை
اَوَلَمۡ يَرَوۡا اَنَّ اللّٰهَ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَلَمۡ يَعۡىَ بِخَلۡقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنۡ يُّحۡیِۦَ الۡمَوۡتٰى
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றைப் படைப்பதில் சோர்வு ஏதும் அடையாத அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லையா?
[அல்குர்ஆன் 46:33]
உபதேசம் : 832
﷽ உபதேசம் : 832
07-10-2023 சனிக்கிழமை
"1)என் பெயரால் சத்தியம் செய்து, அதில் மோசடி செய்தவன் 2)சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் 3)கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் ஆகிய மூன்று சாராருக்கும் எதிராக மறுமையில் நான் வாதிடுவேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2227
நூல் : முஸ்லீம் 1589
. 🕌🕌🕌🕌🕌🕌🕌
🔜 நபிமொழி - ஜும்ஆ 🔚
அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக்கொண்டிருக்கையில்,
சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்" என்றார்கள்.
பிறகு "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது,
(பள்ளி வாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும்!"
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லீம் 1589
அல் குர்ஆன் : 5️⃣9️⃣ : 1️⃣0️⃣
بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
து ஆ
رَبَّنَا اغۡفِرۡ لَـنَا وَلِاِخۡوَانِنَا الَّذِيۡنَ سَبَقُوۡنَا بِالۡاِيۡمَانِ وَلَا تَجۡعَلۡ فِىۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِيۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوۡفٌ رَّحِيۡمٌ ﴿۱۰﴾
"எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்".
அல் குர்ஆன் : 5️⃣9️⃣ : 1️⃣0️⃣
💚💚💚💚
குர்ஆன் வசனம் 581
﷽ குர்ஆன் வசனம் 581
06-10-2023 வெள்ளிக்கிழமை
وَمَنۡ لَّا يُجِبۡ دَاعِىَ اللّٰهِ فَلَيۡسَ بِمُعۡجِزٍ فِى الۡاَرۡضِ وَلَيۡسَ لَهٗ مِنۡ دُوۡنِهٖۤ اَوۡلِيَآءُ ؕ اُولٰٓٮِٕكَ فِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍ
அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளிக்காதவர் பூமியில் அல்லாஹ்வை வெல்பவராக இல்லை. அவனன்றி அவருக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்கள் தெளிவான வழிகேட்டிலேயே உள்ளனர் (என்றும் கூறின.)
[அல்குர்ஆன் 46:32]
உபதேசம் : 831
﷽ உபதேசம் : 831
06-10-2023 வெள்ளிக்கிழமை
"எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி) அஹ்மத்-6748
ஆதம் (அலை). ( 9 )
ஆதம் (அலை). ( 9 )
வெளியேற்றப்பட்டனர்.
فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ ۖ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன' என்றும் நாம் கூறினோம்.
திருக்குர்ஆன் 2:36
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.
திருக்குர்ஆன் 2:38
قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ
"(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன'' என்று (இறைவன்) கூறினான்.
திருக்குர்ஆன் 7:24
يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம்.
திருக்குர்ஆன் 7:27
قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا ۖ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ
இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலருக்கு சிலர் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார் என்று கூறினான்.
திருக்குர்ஆன் 20:123
Thursday, October 5, 2023
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 9 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 9 )
ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது.
وَحَفِظْنَاهَا مِن كُلِّ شَيْطَانٍ رَّجِيمٍ إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُّبِينٌ
ஒட்டுக் கேட்பவனைத் தவிர, விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதைப் பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.
திருக்குர்ஆன் 15:17,18
إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ
அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.
திருக்குர்ஆன் 26:212
وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ
கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).
திருக்குர்ஆன் 37:7
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம்.
திருக்குர்ஆன் 72:8
وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا
(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
திருக்குர்ஆன் 72:9
குர்ஆன் வசனம் 580
﷽ குர்ஆன் வசனம் 580
05-10-2023 வியாழக்கிழமை
நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும், நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்" (என்று கூறப்படும்.)
[அல்குர்ஆன் 46:20]
உபதேசம் : 830
﷽ உபதேசம் : 830
05-10-2023 வியாழக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. அது என்னவென்று கேட்க்க அவர், “வாஹினா (தொடையில் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)” என்றாா். நபி (ஸல்) அவர்கள் “இதைக் கழற்றிவிடு! இது உனக்கு பலஹீனத்தையே ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்தால் ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அஹ்மத்-19149
Wednesday, October 4, 2023
ஆதம் (அலை). ( 8 )
ஆதம் (அலை). ( 8 )
ஆதம் (அலை) தடையை மீறினார்.
فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான்.
திருக்குர்ஆன் 2:36
فَدَلَّاهُمَا بِغُرُورٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ
அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர்.
திருக்குர்ஆன் 7:22
فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۚ وَعَصَىٰ آدَمُ رَبَّهُ فَغَوَىٰ
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.
திருக்குர்ஆன் 20:121
ஆதமிடம் மன உறுதியில்லை.
وَلَقَدْ عَهِدْنَا إِلَىٰ آدَمَ مِن قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا
இதற்கு முன் ஆதமிடம் உறுதிமொழி எடுத்தோம். அவர் மறந்து விட்டார். அவரிடம் உறுதியை நாம் காணவில்லை.
திருக்குர்ஆன் 20:115
ஆதம் (அலை) மிகச் சிறந்தவர்.
إِنَّ اللَّهَ اصْطَفَىٰ آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.
திருக்குர்ஆன் 3:33
குர்ஆன் வசனம் 579
﷽ குர்ஆன் வசனம் 579
04-10-2023 புதன்கிழமை
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوۡا ۚ وَلِيُوَفِّيَهُمۡ اَعۡمَالَهُمۡ وَهُمۡ لَا يُظۡلَمُوۡنَ
ஒவ்வொருவரும் செயல்பட்டதற்கு ஏற்ப அவர்களுக்குப் பதவிகள் உள்ளன. அவர்களின் செயல்களுக்கு அவன் முழுமையாகக் கூலி கொடுப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 46:19]
உபதேசம் : 829
﷽ உபதேசம் : 829
04-10-2023 புதன்கிழமை
"கணவன் கட்டளையிடாமலேயே ஒரு பெண் அவனுடைய பொருளை நல்வழியில் செலவிட்டால் அதன் நன்மையில் பாதி கணவருக்கு உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5195
Tuesday, October 3, 2023
குர்ஆன் வசனம் 578
﷽ குர்ஆன் வசனம் 578
03-10-2023 செவ்வாய்க்கிழமை
وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنۡذِرَ الَّذِيۡنَ ظَلَمُوۡا ۖ وَبُشۡرٰى لِلۡمُحۡسِنِيۡنَۚ
இது அநீதி இழைத்தோரை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவதற்காகவும் அரபு மொழியில் அமைந்த வேதமாகும். (முன் சென்ற வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது.
[அல்குர்ஆன் 46:12]
உபதேசம் : 828
﷽ உபதேசம் : 828
03-10-2023 செவ்வாய்க்கிழமை
"உங்கள் படுக்கையை மற்றவா்களுக்கு வழங்காமல் இருப்பதும், உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களை உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி) திர்மீதி - 1083
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 8 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 8 )
அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேட வேண்டும்.
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۚ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ
ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 7:200
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக!
திருக்குர்ஆன் 16:98
وَقُل رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ
"என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 23:97
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
"என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' (என்றும் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 23:98
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ۖ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 41:36
Monday, October 2, 2023
குர்ஆன் வசனம் 577
﷽ குர்ஆன் வசனம் 577
02-10-2023 திங்கட்கிழமை
قُلۡ مَا كُنۡتُ بِدۡعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدۡرِىۡ مَا يُفۡعَلُ بِىۡ وَلَا بِكُمۡؕ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا يُوۡحٰٓى اِلَىَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِيۡرٌ مُّبِيۡنٌ
எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை" எனக் கூறுவீராக!
[அல்குர்ஆன் 46:9]
உபதேசம் : 827
﷽ உபதேசம் : 827
02-10-2023 திங்கட்கிழமை
"ஒருவா் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளையிடுபவனாக இருந்தால் பெண்ணை அவளுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலி) திர்மீதி-1079
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 7 )
ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல். ( 7 )
மனித உள்ளங்களில் தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான்.
يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
திருக்குர்ஆன் 4:120
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன் 5:91
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِن سَوْآتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ الشَّجَرَةِ إِلَّا أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.
திருக்குர்ஆன் 7:20
فَوَسْوَسَ إِلَيْهِ الشَّيْطَانُ قَالَ يَا آدَمُ هَلْ أَدُلُّكَ عَلَىٰ شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلَىٰ
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
திருக்குர்ஆன் 20:120
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
திருக்குர்ஆன் 114:5
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...