Tuesday, April 11, 2023

பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 18 )

 பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 18 )

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ், (3 முறை). பின்னர்,

اعوذبلله وقدرته من شر ما اجيد و احادر

"அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" (7 முறை).

பொருள் : அல்லாஹ்வின் பெயரால், நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து
நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர் காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

சட்டம் : தமது உடலில் வலி ஏற்பட்டால் இந்த துஆவை ஓத வேண்டும்.

ஆதாரம் : நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, "பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" என்று சொல்வீராக" என்றார்கள்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து,
நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர் காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
ஸஹீஹ் முஸ்லிம் : 4430.

No comments:

Post a Comment