Saturday, November 26, 2022

நபிமொழி

.             🥏🥏🥏🥏🥏🥏

                 *நபிமொழி*


         *கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை.* 

        *நான் (நபி(ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால்,* 

         *நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள்.* 

         *அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பால துண்டுகளாகப் பிரித்து,* 

       *பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி(ஸல்) அவர்களிடம்,* 

          *`உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களோ" என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள்,* 

      *`அவர் (புத்திசாலியாக) இருந்தார்;* 

    *(சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.)* 

       *மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது" என்று பதில் கூறினார்கள்.*


அறிவிப்பவர் :  ஆயிஷா ( ரலி)

நூல் :  புகாரி   3818

No comments:

Post a Comment