﷽ உபதேசம் : 420
20-08-2022 சனிக்கிழமை
"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவை துண்டிப்பதையோ வேண்டி துஆ செய்யாமலும் அவசரப்படாமலும் இருந்தால் அவரது துஆ ஏற்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவசரப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு, "நான் துஆ செய்தேன். (மீண்டும்) துஆ செய்தேன். ஆனால், அல்லாஹ் என் துஆவை ஏற்பதாகத் தெரியவில்லை!" என்று கூறி, சலிப்படைந்து துஆ செய்வதை கைவிட்டு விடுவதாகும்!" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவா்: அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் : 5285
No comments:
Post a Comment