Thursday, August 25, 2022

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது.

 திருக்குர்ஆனின் தனித் தன்மைகள். ( 8 )

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது.


إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَّكْنُونٍ

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.

திருக்குர்ஆன் 56:77,78


بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ فِي لَوْحٍ مَّحْفُوظٍ

ஆம்! இது மகத்தான குர்ஆன்!

பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ளது. 

திருக்குர்ஆன் 85:21,22


மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது.

وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا

நீர் குர்ஆனை ஓதும் போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு திரையை ஏற்படுத்துகிறோம்.

திருக்குர்ஆன் 17:45


وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَىٰ أَدْبَارِهِمْ نُفُورًا

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும்போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

திருக்குர்ஆன் 17:46


திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும்.

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக!

திருக்குர்ஆன் 16:98

No comments:

Post a Comment