Saturday, August 27, 2022

நபிமொழி

 .               🍓🍓🍓🍓🍓🍓🍓

                 நபிமொழி

               நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. `என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்` எனக் கேட்டார். 

         அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) `இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?` என்றனர். 

          நபி(ஸல்) அவர்கள் `இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!" (என்று கூறிவிட்டு அவரிடம்.) 

`நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும் 

அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது

தொழுகையை நிலை நாட்ட வேண்டும் 

ஸகாத் வழங்க வேண்டும் 

உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)

நூல் : புகாரி  1396

No comments:

Post a Comment