இணைகற்பித்தோருடன் உறவாடுதல். ( 2 )
பெற்றோர் சொன்னாலும் இறைவனுக்கு இணைகற்பிக்கக் கூடாது.
وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே!
திருக்குர்ஆன் 29:8
وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே!
திருக்குர்ஆன் 31:15
பெற்றோர் இணைகற்பித்தாலும் அவர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்ய வேண்டும்.
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا
தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம்.
திருக்குர்ஆன் 29:8
وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا
இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்!
திருக்குர்ஆன் 31:15
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.
திருக்குர்ஆன் 17:23
No comments:
Post a Comment