Wednesday, August 24, 2022

இணைகற்பித்தோருடன் உறவாடுதல்‌‌

 இணைகற்பித்தோருடன் உறவாடுதல்‌‌. ( 2 )

பெற்றோர் சொன்னாலும் இறைவனுக்கு இணைகற்பிக்கக் கூடாது.


وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا 

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! 

திருக்குர்ஆன் 29:8


وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا 

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! 

திருக்குர்ஆன் 31:15


பெற்றோர் இணைகற்பித்தாலும் அவர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்ய வேண்டும்.


وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا 

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம்.

திருக்குர்ஆன் 29:8


وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا 

இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்!

திருக்குர்ஆன் 31:15


وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا 

என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். 

திருக்குர்ஆன் 17:23

No comments:

Post a Comment