சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 14 )
سبحان الله
சுப்ஹானல்லாஹ்.
பொருள் : அல்லாஹ் தூயவன்.
சட்டம் : ஒரு முஸ்லிம் பெருந்துடக்கு ஏற்பட்ட காரணத்தால் அசுத்தமாவதில்லை.
ஆதாரம் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளிப்பு கடமையான நிலையில்) நான் மதீனாவின் ஒரு சாலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்) சென்று குளித்துவிட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் பெருந்துடக்குடைவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன் என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகி விட மாட்டார் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 283
No comments:
Post a Comment