கியாமத் நாள் அடையாளம். ( 3 )
பூமி வெட்ட வெளியாகி விடும்.وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا
நாம் மலைகளை இடம் பெயரச் செய்யும் நாளில் பூமியை வெட்ட வெளியாகக் காண்பீர்! அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
திருக்குர்ஆன் 18:47
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.
திருக்குர்ஆன் 56:4, 5, 6
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ
ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாக தூள் தூளாக்கப்படும் போது, அந்நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்.
திருக்குர்ஆன் 69:13, 14, 15
يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا
பூமியும், மலைகளும் அந்நாளில் ஆட்டம் காணும். மலைகள் மண் குவியலாகி விடும்.
திருக்குர்ஆன் 73:14
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
அவ்வாறில்லை! பூமி தூள்தூளாக நொறுக்கப்படும் போது,
திருக்குர்ஆன் 89:21
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,
திருக்குர்ஆன் 99:1
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,
திருக்குர்ஆன் 99:2
No comments:
Post a Comment