சுப்ஹானல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 17 )
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி.
பொருள் : அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.
சிறப்பு : அல்லாஹ் தன் வானவர்களுக்காக அல்லது தன் அடியார்களுக்காக இந்த துஆவை தேர்ந்தெடுத்துள்ளான்.
ஆதாரம் : அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி"அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன். என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5277.
No comments:
Post a Comment