சொர்க்கச் சோலைகள். ( 18 )
மலர்ந்த முகம்.وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
திருக்குர்ஆன் 75:22
فَوَقَاهُمُ اللَّهُ شَرَّ ذَٰلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا
எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
திருக்குர்ஆன் 76:11
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.
திருக்குர்ஆன் 80:38
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 82:13
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 83:22
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ
அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர்.
திருக்குர்ஆன் 83:24
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.
திருக்குர்ஆன் 88:8
No comments:
Post a Comment