🔅🔅🔅🔅🔅🔅🔅
நபிமொழிஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
“(மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!
“யாருடைய ஏடு அவரது வலதுகரத்தில் வழங்கப்படுகிறதோ, அவர் மிக எளிய முறையில் விசாரணை செய்யப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8 வசனத்தில்) கூறுகின்றான்?” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று;
மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுவதாகும்;
கேள்வி கணக்கின்போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 5514
No comments:
Post a Comment