Sunday, March 24, 2024

நற்பண்புகள். ( 38 )

நற்பண்புகள். ( 38 )
பொய் சாட்சி கூறாதீர்!

அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.
திருக்குர்ஆன் 25:72

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது 'பொய் பேசுவது' ஆகியன பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'பொய் சாட்சி' என்பதை நபி(ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
(இதைக் கண்ட) நாங்கள் 'அவர்கள் நிறுத்திக் கொள்ளலாமே!' என்று கூறினோம்.
ஸஹீஹ் புகாரி : 6919.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment