Thursday, March 28, 2024

நற்பண்புகள். ( 43 )

நற்பண்புகள். ( 43 )
அசிங்கமாக பேசாதீர்!

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,அறிந்தவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:148

மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்' என்று கூறுவார்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6035.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment