Sunday, March 24, 2024

நற்பண்புகள். ( 39 )

நற்பண்புகள். ( 39 )
கோள் சொல்லாதீர்!

அவன் குறை கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன்.
திருக்குர்ஆன் 68:11

ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்
நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் '(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்' என்று கூறப்பட்டது.
அப்போது ஹுதைஃபா(ரலி) 'கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6056.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment