லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதன் சிறப்பு. ( 17 )
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
லாயிலாஹ இல்லல்லாஹ்.
பொருள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
சிறப்பு : ஈமானின் கிளைகளில் உயர்ந்தது. "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 58
No comments:
Post a Comment