. 🤲🤲🤲🤲🤲🤲
நபிமொழி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள்.
“அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார்.
அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார்.
ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது;
அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது;
அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது;
தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார்.
இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ 2446
No comments:
Post a Comment