. 🌤️🌤️🌤️🌤️🌤️🌤️🌤️
நபிமொழி
நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், `அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?` என்று கேட்டார்கள்.
நான், `அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன்.
நபி(ஸல்) அவர்கள், `அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது.
உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது.
அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது.
மாறாக, `வந்த வழியே திரும்பி விடு" என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்" என்றார்கள்.
இதைத் தான், `சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்" என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது" என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் ( ரலி)
நூல் : புகாரி 3199
No comments:
Post a Comment