பிஸ்மில்லாஹ் என்பதன் சிறப்பு. ( 1 )
بِسْمِ اللهِ
பி(B]ஸ்மில்லாஹ்.
பொருள் : அல்லாஹ்வின் பெயரால்.
சட்டம் : சாப்பிடும் போதும், பருகும் போதும் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும்.
ஆதாரம் : (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்கள்,
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
ஸஹீஹ் புகாரி : 5376.
No comments:
Post a Comment