பிஸ்மில்லாஹ் என்பதன்
சிறப்பு. ( 6 )اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா.
பொருள் : இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும் செய்கிறேன்.
சட்டம் : படுக்கைக்குச் செல்லும்போது இந்த துஆவை ஓத வேண்டும்.
ஆதாரம் : அபூ தர் அல்கிஃபாரீ(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன். உயிர் வாழவும் செய்கிறேன்)' என்று கூறுவார்கள். (உறக்கத் திலிருந்து விழிக்கும்போது, 'அல்ஹம்து லில்லாஹில் லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நூஷூர் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்து பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.) என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6325.
No comments:
Post a Comment