நரகத்தில் உணவு. ( 1 )
கொதிக்கும் நீர் புகட்டப்படும்.وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ
(ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
திருக்குர்ஆன் 10:4
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு.
திருக்குர்ஆன் 37:67
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
அதற்கும், கொதிநீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள்.
திருக்குர்ஆன் 55:44
فِي سَمُومٍ وَحَمِيمٍ وَظِلٍّ مِّن يَحْمُومٍ
அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 56:42,43
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.
திருக்குர்ஆன் 56:54
وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ وَتَصْلِيَةُ جَحِيمٍ
பொய்யெனக் கருதி வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் கருகுவதும் விருந்தாகும்.
திருக்குர்ஆன் 56:92,93,94
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ
கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
திருக்குர்ஆன் 88:5
No comments:
Post a Comment